அழகியல்....
மண உறுதி நடக்கையில்
காதருகே காதலோடு கிசுகிசுத்தது
எதை ஒளித்து வைப்பது?.
வெட்கத்தையா ? சந்தோஷத்தையா?.
இன்று முதல் என்னவன் என்ற கர்வத்தையா?
மூவிரு மாதமும்
மணப்பந்தல் கனாக்கண்டு ,
நிஜத்தில் நடக்கையில்,
என்னையே மறந்திருந்தேன் ...
எதை நினைவுறுவது?
காதருகே "அழாதே" என்றுரைத்து புன்னகைத்ததையா?
என் தோள் பிடித்திழுத்து நெற்றிப் பொட்டு இட்டதையா?
என்னவள் என்று காதல் வெற்றியை கண்ணில் காட்டியதையா ?
நலுங்கு என்றார்கள் ..
சாஸ்திரம் சட்டரசம் என்றார்கள் ...
பூப்பந்து விளையாடியதும்,
அப்பளம் நொருக்கியதும் ,
எங்கள் பார்வையில்
வான வேடிக்கைதான் !!!
மனதிற்குள் மத்தாப்புதான் !!!
மொத்தத்தில் இரு குடும்பங்கள்
இசைந்து இழைத்த ,
இன்னிசைத் திருவிழா -எங்கள் மண விழா!!!
Friday, December 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
தங்களின் பின்னூட்டம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. வலையுலகிற்கு உங்களையும் வருக வருகவென வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். :)
ReplyDeleteஊர்சுற்றி,தங்கள் வரவேற்பு மகிழ்ச்சி தருகிறது...நன்றி ...
ReplyDeleteதொடர்ந்து எழுதுவோம்....!!
goog .
ReplyDeleterajarajanfire@gmail.com