Wednesday, December 9, 2009

நண்பன்......

என்னுள் நிறைந்த நண்பன்........


ஜானி -- என் நண்பன்...
ஐந்து வயதில் 'அ','ஆ' கற்றது முதல்
பதின் வயதில் தாவணி பழகியது வரை
என்னை அவனும் அவனை நானும்
கொஞ்சி மகிழ்ந்ததை
கோடி கண் கொண்டு
கொண்டாடியது என் குடும்பம்...

பத்தாம் வகுப்பு பாதியில்,
பிரிந்தான் என்னை விட்டு...

அன்று முதல்,
எங்கும் எதிலும் அவனே...
என் செல்ல நாய் நண்பன்..!!

மழலை முதல் மாங்கல்யம் வரை
மாறாது வருவான்-என்ற
மன உறுதியில் தான்
மண்ணள்ளி போட்டுவிட்டான் .....!!!

கண்ணீர் விட்டு கரைய வைத்தான்...

என் வீட்டு தோட்டத்தில்,
இன்றும்-"இங்கு தான் இருக்கிறேன்"
என்று புதைத்த இடத்தினின்று
எழுந்து பார்க்கிறான்!!!!

பார்க்கும் செல்ல பிராணி இடத்திலெல்லாம்,
பகுத்து பார்த்து அவனைத் தேட வைத்தவன் !!!

இன்றும்...
ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்,
ஏதோ ஒரு செல்ல பிராணி இரக்கமின்றி,
தலை ஒரு புறம் துண்டிக்கப்பட
உடல் ஒரு புறம் துடிக்க,

"என் நண்பனோ ??",என்று இருதய வலியும் ,
இரவை உண்ணும் வெறுமையும்,
வற்றாத கண்ணீரும்,
என்ன செய்து ஆறுதல் தேட?- என்ற ஆற்றாமையும்,
பல மாதம் உயிரைப் பிசைகின்ற வலி தருகிறான்!!!

கண்ணீர் மட்டும் நிற்கவில்லை!!!

No comments:

Post a Comment