விழியில் ஜாலமும்
வண்ணத்தில் மாயமும்
நெஞ்சை நிறைத்த காலங்களில்
எனை ஈர்த்த உனக்காக
நீர்த்த கண்களோடு,
இசைத்த உன் குரலுக்காக
இசைந்த காத்திருப்போடு,
ஏங்கி தவித்து
காதலைப் பொழிந்த போது,
எரித்தென்னை சாம்பல் ஆக்கினாய் அன்று. . . . .
இரவும் பகலும்
இன்பமும் துன்பமும்
இன்னது இன்னது என்று
இறுத்தோ நிறுத்தோ
இனம் பிரிக்க இயலாமல்
இவ்வுலகில் உழழுகையில்,
இன்று என் கூறுகிறாய்,
இன்னமும் காதல் செய்கிறேன் என்று?
இறுதி வரை நான் வேண்டும் என்று?
மறந்து போனது விழித்தது உன்னுள்
மரத்து போனது மரித்தது என்னுள்
Thursday, May 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment