Wednesday, August 22, 2012

corporate உலகம்

சுயம் மறந்து
மனிதம் இறந்து
மானியம் நோக்கும்
மானிட வெள்ளம்-
தம்மால் தகர்க்க முடியா
தன் ரத்தச் சிதறல்கைள
தலை மேல் தூக்கி
தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்
தாண்டவம் ஆடுகிறது.....
தலை மேல் தாங்க வேண்டாம்-
தகுமோ அப்பாதகச் செயல்?
தாமும் யாமும்
தாழ்ந்தோரல்ல யாருக்கு யாரும்...,
தம் மதி வழி
தடம் புறப்படும் யாம்
தம் முடி மிதி
தாங்க வழி செய்வோமோ - எனத்
தாங்கும் எம்மையும் எட்டி உதைப்பதென்ன?
விழி பிய்த்துப் பிடுங்குவெதன்ன?
உணர்வும் உளமும் உருக்கிப் பிழிவெதன்ன?
நான் மனம் உவந்து
நன் மனம் ஊற்றி
நித்தமும் உடல் உருக்கி
நெடுவளர் நின் செங்கோல்,
நீண்டெந்தன் உயிர் மாய்ப்பதென்ன?

No comments:

Post a Comment