சுயம் மறந்து
மனிதம் இறந்து
மானியம் நோக்கும்
மானிட வெள்ளம்-
தம்மால் தகர்க்க முடியா
தன் ரத்தச் சிதறல்கைள
தலை மேல் தூக்கி
தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்
தாண்டவம் ஆடுகிறது.....
தலை மேல் தாங்க வேண்டாம்-
தகுமோ அப்பாதகச் செயல்?
தாமும் யாமும்
தாழ்ந்தோரல்ல யாருக்கு யாரும்...,
தம் மதி வழி
தடம் புறப்படும் யாம்
தம் முடி மிதி
தாங்க வழி செய்வோமோ - எனத்
தாங்கும் எம்மையும் எட்டி உதைப்பதென்ன?
விழி பிய்த்துப் பிடுங்குவெதன்ன?
உணர்வும் உளமும் உருக்கிப் பிழிவெதன்ன?
நான் மனம் உவந்து
நன் மனம் ஊற்றி
நித்தமும் உடல் உருக்கி
நெடுவளர் நின் செங்கோல்,
நீண்டெந்தன் உயிர் மாய்ப்பதென்ன?
Wednesday, August 22, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment