Thursday, February 2, 2012

காதலின் நினைவுகள்

கண்கள் முன்னே யாவும் நலம்
எங்கும் மனிதர்கள்..
வாழப் பிரியப்பட்டு தான்
வழி தேடியது விழி..
விழுந்தேன் புல் மெத்தையில்
என நினைத்தேன்
விழித்தேன் முள்ளினூடே
முளைத்திருந்தேன்..
எழுந்தேன் எங்கோ இருந்தேன்
மனதால் உனைத் தேடிக்கொண்டு....
வேண்டிய அனைத்தும்
கிட்டிய வேளையில்,
வேண்டாமல் நீளும்
இடைவெளிக்கு விடை தான் தர முடியவில்லை...
முகத்தில் சிரிப்பும்
மனதில் தவிப்பும்
முகமூடி மோகம்
இல்லாமல் போகும்
நாள் எங்கே?
நானும் நீயும்
நேசித்ததை மீறி
கொண்ட யுத்தங்களே மேல்,
இங்கு நான் உழலும் தனிமையை விட.....

No comments:

Post a Comment