Friday, April 1, 2011

நானும் காதலும்.............

உருகும் பனியும்
நனையும் மலரும்
நள்ளிரவில்
நெருக்கத்தில் இருந்தென்ன இன்பம்?

என் மூச்சு வாங்கி
உன் சுவாசம் சேர்க்க
காற்றுக்கு தான்
காவல் பயணம் எத்தனை தூரம்?

வடக்கும் தெற்கும்
நான் இங்கும்
நீ அங்கும்
நிலைப்பதிலே தான்
நினைவுக்கு வருகிறது-
காற்று மீண்டு வந்து
கால தாமதமாய்
பதில் சொல்கையில்...

No comments:

Post a Comment