Sunday, March 6, 2011
ஏன் இந்தக் காதல் அவதி?
இரத்தத் தொடர்பின்றி
பித்தம் தலைக்கேறும்
பாசமே காதலாயின்,
நித்தம் வலியின்றி
நாளும் இரணமின்றி
வாழ்க்கையில் வசந்த்தத்தை தான் அது தாராதோ?
தரும் போல் தரும்
மறுகும் போல் மறுக்கும்
இறுதியில் அது மிதிக்கும்
என் நெஞ்சம் மரிக்கும்...
நான்-- நாம் ஆகி
நாளும் பொருள் பட
நெஞ்சம் பட பட
நித்தம் உடன் பட
நின் மனதுள் தான் நான் வாழலாகாதோ?
நான் பாசமும்
நீ வேஷமும் ஈவது ஏனோ?
இன்னும் உன்னோடு
இச்சையுடன் இணைந்திருப்பதே வீண் தானோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment