Sunday, August 22, 2010

வெற்றி

வாழ்க்கைப் பாதையில்
வழிந்திடும் முட்கள்
முகப்பு முகர்ந்ததும்
ஒதுங்கிச் செல்ல ஒத்துழைக்கும்..........

முல்லை வடிவில்
முட்கள் இருந்தால்
மனத்தையும் சேர்த்தல்லவா
அவைத் தைத்துக் கிழிக்கும்...


மிச்சமுள்ள பாதை செல்ல
இரத்தம் சுவடாய் பின் வரும் மெல்ல....

குருதி காயும் காலம்
மன உறுதி தேயும் நேரம்......

ஞாயிறு மலரும் காலை தோறும்
ஞான விடியல் ஏக்கம் ஊறும்....

கைப்பிடி சிநேகத்தில்
காலூன்றி முன்னேறினேன்....

முன்னேறினேன்....

வெற்றிப் பழம்
தோல்வி விதையில்
உழைப்பு உரத்தில்
உண்டாகும் உறுதியாய்...

பழம் தேடும் பயணம் மட்டுமே
கடினம் பலருக்கு
சுலபம் சிலருக்கு..

No comments:

Post a Comment